Eelam Tamil LONDON

Subtitle

Blog

Tamilan

Posted by jeevarajaloysius on August 12, 2012 at 5:20 AM

கடல் கொண்ட தமிழனின் வரலாறு. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு.இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று. இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே! இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே குழிகளும் காணப்படும்.பசும் புல் தரைகளும் உண்டு.நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும்.இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது.அதன் நீர் குடிப்பதற்க்கு நன்று. ஆரம்பத்தில் இங்கு "டார்குயின்" என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது.இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று.சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.இதில் "உமிரி"என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி. கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர்.இதனால் இத் தீவுக்கு சங்கு புட்டித் தீவு,சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு.இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது.மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும்.சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம். சோழர் ஆட்சியில் கச்சை தீவு சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும்,குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம்.அக் கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது.சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள்.சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான்.பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்கலே மிதந்தது.இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி (லென்ஸ்;) மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர்.இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது. 1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.இடையில் கச்சை தீவை அடைந்தனர்.அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு,திப்பிலி,இலவங்கம்,சந்தனம்,யானையின் தந்தம்,விலையுயர்ந்த முத்துக்கள்,முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர். இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல்,சங்கு குளித்தல்,மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர்.இது குறித்து அகநானூறு ,புறநானூறு,கலித்தொகை,சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ்,ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார். 11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு,இலங்கைத் தீவினையும் வென்றான்.அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான்.16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது.பாண்டியரது ஆட்சி மறைந்தது.இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர். img Courtesy:google ஆதாரம் : வரலாற்றில் கச்சை தீவு உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன் lainnya dari கச்சை தீவு, லெமூரியா கண்டம் கடல் கொண்ட தமிழனின் வரலாறு. கடல் கொண்ட கன்னித்தமிழ் நிலம். Ditulis Oleh : thiraavida thamizhan // 9:22 AM Kategori: லெமூரியா கண்டம் 0 comments: Post a Comment தங்களது பொன்னான கருத்துக்களை நாகரீகமான வார்த்தைகளில் பதியுமாறு வேண்டுகிறோம். Newer Post Older Post Home Popular Posts சீமான் முத்துராமலிங்க தேவரின் குரு பூசைக்கு சென்றதை ஏன் விமர்சிக்கிறோம் ? அதற்க்கு நீங்கள் முத்துராமலிங்க தேவர் என்பவர் யார் ? என்பதை இந்த கட்டுரையின் மூலம் அறியவேண்டும். முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியர் ந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன் தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை. சீமானின் கொள்கை மாற்றங்களை விளக்கும் கேலிச்சித்திரம் சீமான் இருதியுத்த காலகக்கத்தில் தமிழகத்தில் புலியாய் உறுமிய பிரபாகரனின் தம்பி. தேர்... கடல் கொண்ட தமிழனின் வரலாறு. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீ... கடல் கொண்ட கன்னித்தமிழ் நிலம். ஆ யிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கடற்கரை. சில அளவு கோல்கள் 1076 கி.மீ. என்றும், சில 1206 என்றும் வே... சுமேரியர்களிடம் கண்ணகி. உலகத்தின் தொன்மையான நாகரீகங்களுக்கு தமிழே அடிப்படை என்பதற்கான இன்னொரு சான்று இந்தியாவின் தொன்மயைக்கூரும் சிந்துசமவெளி, ஹரப்பா, மொஹஞ்சதாரோ பண்பாட்டு நகரங்கள், திராவிட பண்பாடா ? அல்லது ஆரிய பண்பாடா ? என்று மிகப்பெரிய ... கீதயின் மறுபக்கம் மகாபாரதம் நடந்த கதையா? பகவத் கீதை தனியொரு ஆன்மீக நூலாகவும், பாராயணம் செய்ததற்குரிய பக்தி ... நாம் தமிழர் கட்சியின் ஆவணம், சாதாரண கட்டுரையை போல உருவாக்கம், இது தான் கொள்கை உருவாக்கமா ? நாம் தமிழர் கட்சியின் கொள்கை,செயல் திட்டம் பற்றி ஐயா சுபவீரபாண்டியன் அவர்களின் அருமையான ஆய்வு ஏறத்தாழ 120 பக்கங்களைக் கொண்ட தங்கள் கொள்கை, ... இனி கணினியில் ஆங்கிலத்தை விட தமிழில் எழுதுவதே சுலபம், கணினியில் தமிழில் எழுதுவது எப்படி ? தமிழில் எழுதவேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் http://www.google.com/transliterate என்ற இணையதளத்திற்கு சென்று ஆங்கிலத்தில் எழுத... பழந்தமிழர்களின் சுழியம் ”0” கண்டுபிடிப்பு - பேராசிரியர் இரா.மதிவாணன் முல்லை.உதயதாசு-சுவிசு. அறிவாலயம் உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் "பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா" எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் ... அச்சம் என்பது மடமையடா ஆரியம் வேறு திராவிடம் வேறு என்ற விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேலையில் தமிழகத்தில் புதிதாய் கிளம்பியுள்ள சில தலைகள், தமிழர் வேறு திரா... Share on google Share on facebook Share on twitter Share on email More Sharing Services 1 இன்றைய கேலிச்சித்திரம் பழைய இடுக்கைகள் பின் தொடருவோர் உங்களுடன்

Categories: Tamilan

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments